**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

ஞாயிறு, 1 நவம்பர், 2009

"பெரியார் சிந்தனைகள்" கருத்தரங்கம்


பெரியார் சிந்தனைகள் எனும் அறிவுக்களஞ்சியத்தை முன்பு மூன்று தொகுதிகளாக வழங்கியவர் அய்யா ஆனைமுத்து அவர்கள். இப்போது அவை கூடுதல் செய்திகளுடன் இருபது தொகுதிகளாக பிப்பிரவரி 2010 ல் வெளிவர உள்ளது என்பதையும் சென்ற பதிவில் தந்துள்ளோம். இந்த நூலுக்கு முன்பதிவு செய்துள்ள தோழர்களின் கலந்தாய்வும் , பெரியார் சிந்தனைகள் நூலைப் பற்றிய கருத்தரங்கும் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடத்தில் நேற்று 1.11.09 மாலை 6.oo மணிக்கு நடைபெற்றது. நூலைப் பற்றிய சிறப்புரையை தோழர் ந. பன்னீர்செல்வம் நிகழ்த்தினார். முன்பாக பேரவையின் செயலாளர் நா. வரதராசு வரவேற்புரை ஆற்றினார். சிறப்புரைக்குப் பின்பு நூலின் விற்பனை அணுகுமுறை பற்றியும், வழிமுறை பற்றியும் தோழர்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டது. கருத்தரங்கின் இறுதியாக பொருளாளர் ச. அங்கமுத்து நன்றியுரை ஆற்றினார்.