**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

திங்கள், 12 ஏப்ரல், 2010

பேரவைக் குடும்பச் சந்திப்பு - அம்பேத்கர் பிறந்தநாள் விழா

சூலூர் பாவேந்தர் பேரவையின் குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி
மற்றும் அம்பேத்கரின் 120- ஆம் பிறந்தநாள் விழா திருவள்ளுவர் ஆண்டு 2041
14.4.2010 புதன் கிழமை மாலை 5.30 மணிக்கு சூலூர் கலங்கல் பாதையில்
உள்ள தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடத்தில் (நடராசன் அங்கம்மாள் வளாகம் மேல்தளம் ) நடைபெற உள்ளது.

நிகழ்வுகள்

* புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்

* சாதி மதம் கடந்து தமிழ்க் குடும்பங்கள் ஒன்று கூடல்

* சாதி மறுப்பு மணம் புரிந்த புது இணையருக்குப் பரிசளித்துப் பாராட்டல்

* வாழ்க்கைச் செய்திகளைக் கலந்து பேசுதல் - விருந்துண்ணல்


வரவேற்பு : சூ.. வேலுமயில்

தலைமை : கி.மா. கனகராசன்


சிறப்பு வருகை : பேரா. மீனாட்சி சுந்தரம்
பேராசிரியை. அ. சானகி


நன்றி : சூ.மா. சரவணகுமார்

விழைவு


சாதிமறுப்பு மணம் புரிந்த புதுமணமக்களை விழாவிற்குத் தோழர்கள் அழைத்து
வருதல்.