**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

தன்மான இயக்க மூத்த தோழர் செந்தலை ச. நடராசன் மறைவு.


புலவர் செந்தலை ந. கவுதமனின் தந்தையாரும், சுயமரியாதை இயக்கமாக இருந்த 1944 ஆம் ஆண்டிலிருந்து தன்மான இயக்கச் செயல் வீரராகவும், தஞ்சை மாவட்டம் செந்தலை திராவிடர் கழகத் தலைவராகவும் இருந்தவருமான - தோழர் ச. நடராசன் தம் 86 ஆம் வயதில் கோவை - சூலூரில் தம் மகன் இல்லத்தில் 7.2.2009 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் கண்கள் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டன.
இரங்கல் நிகழ்ச்சியில் கோவை. மு. இராமநாதன், கு.வெ.கி. ஆசான் முதலியோர் உரையாற்றினர்.சூலூரில் நடந்த இரங்கல் நிகழ்ச்சியிலும் படத்திறப்பு நிகழ்ச்சியிலும் கோவை மாவட்ட முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் திரளாகப் பங்கேற்றார்கள்.
அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் முதலியோர் நேரிலும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொலைபேசியிலும் இரங்கல் தெரிவித்தார்கள்.
திராவிடர் கழகக் கொடி போர்த்தப்பட்டு தோழர் ச. நடராசன் உடல் எந்த மதச் சடங்குகளுமின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது.