**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

மனித சங்கிலி

ஈழத் தமிழர்களின் உயிர் காக்கக் கைகோத்துக் குரல் கொடுக்கும் மனித சங்கிலிப் போராட்டம் கோவை நகர்மண்டபத்திலிருந்து (டவுன்ஹால்) நாகை வரை இன்று 17.2.09 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரை நிகழ்த்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதை ஒட்டி சூலூர் ஒன்றியம் ஒண்டிபுதூர் மேம்பாலம் முதல் காரணம்பேட்டை வரை ஏற்பாடு செய்துள்ளது. பொது மக்கள்,மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வு இந்திய அரசின் நடவடிக்கையிலும் சிங்கள பேரினவாத அரசின் இனப்படுகொலை நிகழ்வை தடுத்து நிறுத்தும் விதமாகவும் இருக்கும் என்பதே தமிழகத் தமிழர்களின் உறுதியான நம்பிக்கை!
கை கோப்போம்! கை கோப்போம்!
ஈழத் தமிழர் துயர் நீங்க கை கோப்போம்!